டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலுங்கான உதயமானது. தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் இருக்கிறது. ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க வேண்டிய சூழ்நிலை. ஆந்திராவின் புராதன நகரான பிரபவாதி சாயலில், பழைமையும், புதுமையும் கொண்ட நகரமாக புதிய தலைநகரை உருவாக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்காக இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுடன் சந்திரபாபு நாயுடு ஒப்பந்தம் செய்துள்ளார்.
புதுமையான விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பழமையான விஷயங்களை நீங்கள் முடிவு செய்து சொல்லுங்கள் அதை நாங்கள் செய்து தருகிறோம் என்று அந்த நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து ஆந்திராவின் புதிய தலைநகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஒரு குழுவை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த குழுவில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தமிழில் வானம் படத்தை இயக்கியவரும் சமீபத்தில் வெளியான கவுதமிபுத்ரா சதாகர்ணியை இயக்கியவருமான கிரிஷ். படத்தின் கலை இயக்குனர் ஆனந்த்சாய் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஒரு தலைநகர் உருவாக்கத்தில் திரைக் கலைஞர்களை பயன்படுத்துவது இதுவே முதன் முறையாகும்.