தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கு எதிராக போராடுபவர்கள் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தை சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கருத்துக்கு ஓரளவு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் படப்பிடிப்புகளில் பெப்சி மற்றும் கோக் பயன்படுத்தப் போவதில்லை என்று முன்னணி தயாரிப்பாளரான சி.வி.குமார் தெரிவித்துள்ளார். "நமது விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றிலிருந்து நான் தயாரிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இனி பெப்ஸி மற்றும் கோக் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என முடிவெடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் சி.வி.குமார்.
சி.வி.குமாரின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்ல, அவருடைய நண்பர்களும் சி.வி.குமாரின் முடிவை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.