ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கு எதிராக போராடுபவர்கள் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தை சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கருத்துக்கு ஓரளவு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் படப்பிடிப்புகளில் பெப்சி மற்றும் கோக் பயன்படுத்தப் போவதில்லை என்று முன்னணி தயாரிப்பாளரான சி.வி.குமார் தெரிவித்துள்ளார். "நமது விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றிலிருந்து நான் தயாரிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இனி பெப்ஸி மற்றும் கோக் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என முடிவெடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் சி.வி.குமார்.
சி.வி.குமாரின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்ல, அவருடைய நண்பர்களும் சி.வி.குமாரின் முடிவை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.