தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில் தற்போது ஒரு படம் திரையிடப்பட்டால் அதன் வசூலில் தயாரிப்பாளர்கள் 60 சதவிகிதமும், தியேட்டர் அதிபர்கள் 40 சதவிகிதமும் பிரித்துக் கொள்வார்கள். தற்போது தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு 50 சதவிகிதம் தரவேண்டும் என்று கேட்டனர். இதற்கு கேரள திரைப்பட திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் போராட்டம் அறிவித்தனர். புதுப்படங்களை திரையிடாமல் இருந்து வந்தனர். இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு வர வேண்டிய பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் முடங்கியது. மலையாள திரையுலகமே ஸ்தம்பித்தது. இரு தரப்புக்கும் பலசுற்று பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் "கேரள அரசு இந்த பிரச்சினையை கையிலெடுத்து சரியான நிலைப்பாட்டை எடுக்கும். தியேட்டர் அதிபர்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்துவது சரியல்ல. அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்ற வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து தியேட்டர் அதிபர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.