அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
எப்போதுமே ஆக்ஷ்ன் ஹீரோக்கள் தங்களுக்கு பிடித்த படமாக தங்கள் நட்சத்திர அந்தஸ்திலிருந்து கீழிறங்கி நன்றாக நடித்த படங்களைத்தான் குறிப்பிடுவார்கள். கமல்ஹாசன் 16 வயதினிலே படத்தைச் சொல்வார், ரஜினி, முள்ளும் மலரைச் சொல்வார். அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் தனக்கு பிடித்த படமாக கூறுவது பெற்றால்தான் பிள்ளையா? காரணம் இந்தப் படத்தில் எந்த ஒரு காட்சியிலும் ஹீரோ எம்.ஜி.ஆர் தெரியவே மாட்டார். அனாதை ஆனந்தன் என்ற கேரக்டராக வாழ்ந்திருப்பார்.
சென்னையில் வாழ வழி தேடி அலையும் அனாதை ஆனந்தனுக்கு தெருவில் ஒரு குழந்தை கிடைக்கிறது. அதற்கு கண்ணன் என்று பெயர் சூட்டி வளர்க்கிறார். அம்மா வெளியூர் சென்றிருப்பதாக குழந்தையிடம் பொய் சொல்லி தான் தந்தை என்று சொல்லி வளர்ப்பார். குழந்தை சவுகார் ஜானகிக்கு பிறந்தது. கிராமத்து பெண்ணான சவுகார் ஜானகியை ஏமாற்றி ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு வந்து விடுவார் அசோகன். அவரைத் தேடி வந்த சவுகார் ஜானகி தொலைத்த குழந்தை அது. அதன் பிறகு சவுகார் ஜானகியும், அசோகனும் சேர்ந்து விடுகிறார்கள். குழந்தையை தேடுகிறார்கள். கடைசியில் ஆனந்தனிடம் குழந்தை இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். பாசத்தை ஊட்டி வளர்த்த குழந்தையை தர மறுக்கிறார் ஆனந்தன். விஷயம் கோர்ட்டுக்கு போகிறது. பாசமா, உரிமையா என்கிற விவாதம் நடக்கிறது. என்ன தீர்வு என்பது கிளைமாக்ஸ்.
சாதரண கிழிந்த சட்டை, சரியான அளவில் தைக்கப்டாத பேண்ட் இதுதான் எம்.ஜி.ஆரின் உடைகளாக இருக்கும். கண்ணன் மீது பாசத்தை கொட்டுகிற காட்சியிலும் நீதிமன்றத்தில் உருகும் காட்சியிலும் படம் பார்க்கிறவர்களை அழ வைத்து விடுவார். எம்.ஜி.ஆரால் இப்படியும் நடிக்க முடியுமா அன்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். படம் 1966ம் ஆண்டு வெளிவந்தது.