மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது . ஜல்லிக்கட்டிற்காக திரைத்துறையில் உள்ளவர்களும், அரசியல் கட்சியினரும், மாணவர்களும் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து கொண்டும், பீட்டாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி கொண்டும் வருகிறார்கள் . நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாசும் ஜல்லிக்கட்டை தொடர்ந்து ஆதரித்து கொண்டு இருக்கிறார் . ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தை திருநாளில் ஜல்லிக்கட்டிற்காக "கொம்பு வச்ச சிங்கம்டா..." என்ற பாடல் ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று ஜி.வி.பிரகாஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்தார். அதில் தான் களத்திலும் இறங்க இருப்பதாகவும் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்க போவதாகவும் கூறியிருந்தார்.
இன்று காலை நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர்களும் சேலம் ஆத்தூரில் இருக்கும் தலவாய்ப்பட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது....."ஜல்லிக்கட்டிற்கு பீட்டா போட்டு இருக்கும் தடையை நீக்க வேண்டும். பீட்டா மத்திய, மாநில அரசின் இடத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருகிறது. பீட்டா தடையை நீக்கும் வரை போராட்டாம் நடந்து கொண்டே இருக்கும். பீட்டா பற்றி அறியாமல் பல திரைபிரபலங்கள் அதில் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் நாட்டுமாடு இனங்கள் அழிந்து போய்விடும்" என்றார்.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர்களும் சேலத்தை தொடர்ந்து மதுரை அலங்காநல்லூர் வந்தவர்கள், அங்கும் போராட்டாக்காரர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் செய்தார். ஜல்லிக்கட்டு நடக்கும் வரை இந்த போராட்டம் ஓயாது என்றும் கூறினார் ஜிவி பிரகாஷ்.