டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழகத்திற்கு பொங்கல் பரிசாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என, நடிகர் சங்கம் கூறியுள்ளது.
நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும், ஒவ்வொரு கலாசார அடையாளம் உள்ளது. அவை அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில், நடிகர் சங்கம் முழுமையாக நம்புகிறது. ஏறு தழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டு, தமிழர்களின் தொன்மை அடையாளமாக உள்ளது. சட்டத்தின் முன், ஜல்லிக்கட்டு பற்றி வேறு பார்வை இருக்கிறது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், இதை சட்டத்திற்கு புரிய வைத்து, நம் மொழிசார்ந்த கலாசாரங்களை வாழ வைப்பது கடமை. தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய, அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், தன் கருத்தை பதிவு செய்த நடிகையிடம், சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது. ஜல்லிக்கட்டு விஷயத்தில், எல்லை மீறல் நடப்பதற்கு முன், மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியாவது, இந்தாண்டு ஏறு தழுவுதலை நடத்தித் தர வேண்டும் என, நாங்கள் வேண்டுகிறோம். இதுவே, தமிழக மக்களுக்கு தரும் பொங்கல் பரிசாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.