டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மதயானைக்கூட்டம் படத்தில் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் வேலராம மூர்த்தி. பின்னர், கொம்பன், பாயும்புலி, சேதுபதி, கிடாரி படங்களில் வில்லன் மற்றும் அப்பா வேடங்களில் நடித்த அவர், தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா, தொண்டன் உள்பட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங் களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இதுவரை கிராமத்து கதைகளிலேயே நடித்து வந்த அவர், கெளதம்மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் சிட்டி சப்ஜெக்ட்டில் நடிக்கிறார்.
ஆக, இதுவரை கிராமத்துக் கதைகளுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்று கருதப்பட்டு வரும் வேலராமமூர்த்தி, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பிறகு கிராமம், நகரம் என இரண்டுவிதமான கதைகளுக்கும் ஏற்ற நடிகராகி விடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமா மற்றும் இந்தி சினிமா வரை புகழின் உச்சியில் இருந்து வந்த பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் தற்போது சரிந்து விட்டதை அடுத்து, பிரகாஷ்ராஜ்க்கான வில்லன் வேடங்கள் வேலராமமூர்த்தியை முற்றுகையிட்டிருக்கிறது. அதனால் பிரகாஷ்ராஜின் வில்லன் இடத்தை வேல ராமமூர்த்தி பிடித்து விடுவார் என்றொரு பேச்சு கோலிவுட்டில் எழுந்திருக்கிறது.