பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜல்லிக்கட்டு விவகாரத்தில், எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், திரிஷா நடிக்கும் ஆறு படங்களின் தயாரிப்பாளர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.
பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் எதிர்ப்பால், இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், பீட்டாவை மட்டுமின்றி, அதற்கு ஆதரவு தரும் நடிகை திரிஷா உள்ளிட்டவர்களுக்கும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், கர்ஜனை படப்பிடிப்பில் இருந்த திரிஷாவை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னணி கதாநாயகியாக உள்ள திரிஷா, தற்போது, மோகினி, சதுரங்கவேட்டை - 2
உள்ளிட்ட, ஆறு படங்களில் நடித்து வருகிறார்.
இதில், மோகினி படம், முடியும் தறுவாயில் உள்ளது. திரிஷாவுக்கு பலத்த எதிர்ப்பு காணப்படுவதால்,100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ள படதயாரிப்பாளர்கள், கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், திரிஷாவின் தாய் உமா, நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார். அதில், திரிஷாவின், டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; திரிஷாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து, உமாகூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு, திரிஷாஎதிரானவர் அல்ல. பீட்டாவில், திரிஷா உறுப்பினராகவோ,விளம்பர துாதராகவோ இல்லை, என்றார்.
- நமது நிருபர் -