பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சு பற்றி சரத்குமார் கூறியிருப்பதாவது... தமிழ் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக ரஜினி கூறியிருக்கிறார். அப்படி எந்த சூழ்நிலையும் இங்கு உருவாகவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று திறம்பட கட்சியை நடத்துகிறார். கட்சி பிளவுபடும் என்ற எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதால் அவதூறு பரப்புகிறார்கள். ரஜினி எனது தனிப்பட்ட நண்பர் ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து நிற்பேன். பீட்டா அமைப்பில் இருக்கும் வெளிமாநில நடிகர், நடிகைளுக்கு தமிழ் கலாச்சாரம் பற்றிய அறிவு இல்லை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேச அவர்களுக்கு உரிமையும் இல்லை. என்றார் சரத்குமார்.
சரத்குமாரின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஆங்காங்கே அவரது உருவ பொம்மையை எரித்தனர்.