Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

துணிச்சலும், பாசமும்!

16 ஜன, 2017 - 19:12 IST
எழுத்தின் அளவு:
MGRs-Brave-and-Love

புகைப்படக்கலை நுணுக்கம் தெரிந்தவர் எம்.ஜி.ஆர்., என்பது அறிந்ததே. பெரும்பாலும் தலைவர்களுக்கு மாலையிடும் போது எடுக்கப்பட்ட படங்களில் ஒருவர் முகம் தெளிவாக தெரியும். இன்னொருவர் முகம் மாலை அல்லது போடுபவரின் கை இடையே வந்து மறைத்துவிடும். ஆனால் எம்.ஜி.ஆர். யாருக்காவது மாலை அணிவித்தாலோ, அல்லது அவருக்கு அணிவித்தாலோ இருவரது முகமும் மறைக்காமல் தெளிவாக தெரியும்படி பார்த்துக் கொள்வார்.


யாராவது மாலை அணிவித்தால், போட்டோ எடுக்க வசதியாக கழுத்தில் மாலை இருந்தபடியே, போடுபவரது இரு கைகளையும் லாவகமாக இறுக்கி பிடித்துக்கொள்வார். அந்த நேரத்தில் இருவரது முகமும் நன்றாக தெரியும். எங்களை போன்ற போட்டோகிராபர்களுக்கு அருமையான படம் கிடைக்கும். இங்கு வெளியிட்டிருக்கும் மாயத்தேவர் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கும் படத்தை பார்த்தாலே நான் சொன்னது விளங்கிவிடும்.



துணிச்சல்


எம்.ஜி.ஆரின் துணிச்சலுக்கு உதாரணமாக ஒரு சம்பவம். 1977 சட்டசபை தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதிக்கு, வேட்புமனு தாக்கல் செய்ய புறப்படும்முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். பெரிய மாலையை தொண்டர்கள் துாக்கிக்கொண்டு வந்தனர். இப்போது இருப்பது போன்று சிலைக்கு அருகில் நிற்கும் வசதி இல்லை. காரை விட்டு இறங்கினார் எம்.ஜி.ஆர்., தொண்டர்களில் சிலர் எங்கேயோ சென்று வீடுகளில் உள்ள மர ஏணி ஒன்றை எடுத்து வந்தனர். ''தலைவா... நீங்கள் சிரமப்பட வேண்டாம் கீழேயே இருந்து மாலையை தொட்டு கொடுங்கள். நாங்கள் ஏறி அணிவிக்கிறோம்'' என்றனர். அவர் காதில் வாங்கவில்லை.


சிலையையும், ஏணியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, சட்டென ஏறத்தொடங்கிவிட்டார். 'மேலே நிற்க இடமில்லையே... என்ற திகைப்புடன் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏணியின் மீது ஏறி சிலை பீடத்தை அடைந்த எம்.ஜி.ஆர்., குறுகலான பீடத்தின் மீது நின்று, தன் இரு கைகளால் சிலையை தொட்டு கொண்டார். கொஞ்சம் நிலை தடுமாறினால் விழ நேரிடும். அதை பொருட்படுத்தாமல் சிலைக்கு பின்புறம் ஒருவர் மாலையை துாக்கிகொடுக்க, அதை லாவகமாக வாங்கி, சிலையின் கழுத்தில் விழும்படி அணிவித்தவுடன், அங்கு கூடியிருந்தோர் கைதட்டியது அந்த பகுதியையே அதிர வைத்தது. சினிமாவில் வீரதீர செயல்களுக்கு 'டூப்' போட்டு எடுப்பதாக அறிவோம். ஆனால் பலர் முன்னிலையில் தைரியமாக, பிடிப்பில்லாத ஒரு இடத்தில் வேட்டியுடன் மேலே ஏறி, பிரச்னையின்றி கீழே இறங்கி வந்தார்.


பாச உணர்வு


எம்.ஜி.ஆர்., அமர்ந்திருக்க மற்றவர்கள் பின்னால் நிற்பது போன்று பல போட்டோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் வித்தியாசமான சம்பவத்தை எந்த முதல்வரும் செய்யாததை நினைவு கூற்கிறேன். அமைச்சர்கள் ராஜ்பவனில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபின், கோட்டைக்கு வந்தனர். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைச்சர்களை, அவர்களது அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். மற்ற சீனியர் அமைச்சர்களை பின்னால் நிற்கச் செய்து, தானும் ஓரத்தில் நின்று குரூப் போட்டோ எடுக்கச் சொன்னார். இந்த செயல், சகோதரர்களிடம், மூத்த அண்ணன் காட்டும் பாச உணர்வை பிரதிபலித்தது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in