டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜல்லிக்கட்டு தடை, தமிழகத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. திரைத்துறையில் உள்ளவர்களும், பல அரசியல் கட்சியினரும், மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுப்பது மட்டுமில்லாது போராட்டமும் நடத்தி வருகின்றனர். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாசும் ஜல்லிக்கட்டை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தை திருநாளில் ஜல்லிக்கட்டிற்காக "கொம்பு வச்ச சிங்கம்டா..." என்ற பாடல் ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் இன்று பதிவு செய்தார். அதில், வீடியோவில் மட்டும் நான் ஆதரவு கொடுக்க போவது இல்லை களத்திலும் இறங்க போகிறேன் என்று கூறியுள்ளார்.
வீடியோவில் ஜி.வி.பிரகாஷ் மேலும் கூறியதாவது.... "நான் நாளை சேலம் ஆத்தூரில் நடக்கயிருக்கும் ஏறுதழுவுதல் போட்டியில் களம் இறங்க போகிறேன். சிலர் ஜனவரி மாதத்தோடு இந்த போராட்டம் ஓய்ந்து விடும் என்கிறார்கள், கண்டிப்பாக இருக்காது. இந்த மாதம் மட்டும் இல்லை, ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக எனது போராட்டம் தொடரும், நான் மட்டுமல்ல, என் நண்பர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பார்கள்'' என்று கூறியுள்ளார்.