ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டு மக்களிடம்' நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை' என்று விளக்கமளித்தாலும் த்ரிஷாவை தமிழ்நாட்டு மக்கள் மன்னிப்பார்களா என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சனையை வளர்த்து வரும் பீட்டா அமைப்புக்கு தெரிவித்து வரும் ஆதரவிலிருந்து முழுதாக த்ரிஷா விலகும் வரை இந்தப் பிரச்சனை ஓயாது என்றே தெரிகிறது.
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் த்ரிஷா முன்னணி நடிகையாக இருந்து பல கோடிகள் சம்பாதிப்பதற்குக் காரணமாக இருந்தது தமிழ்ப் படங்கள்தான். திரையுலகில் அறிமுகமாகி 10 வருடங்கள் மேலாகியும் இன்னமும் அவர் நாயகியாக நடிப்பதற்கு தமிழ் ரசிகர்கள் இதுவரை ஆதரவாக இருந்து வந்திருக்கிறார்கள்.
இப்போதுதான் த்ரிஷா, தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். “மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, ஹே டியூட், 1818, 96' என அவர் கைவசம் தற்போது 6 படங்கள் உள்ளன. இந்தப் படங்களில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
த்ரிஷாவை நம்பி இந்தப் படங்களை ஆரம்பித்துள்ள தயாரிப்பாளர்கள் இதனால் கலக்கத்தில் உள்ளனர். இவற்றில் 'மோகினி' படம் முடிவடையும் நிலையில் உள்ளது. 'சதுரங்க வேட்டை 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டும் நடைபெற்றுள்ளது. 'கர்ஜனை' படத்தின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் கடந்த வாரம் நின்று போனது. மற்ற மூன்று படங்களின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. தமிழ்நாட்டு மக்கள் த்ரிஷா மீது வெறுப்பில் இருப்பதால் இந்தப் படங்களில் த்ரிஷா தொடர்ந்து நீடிப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.படம் வெளிவரும் போது விவகாரம் பெரிதானால் அந்தப் படங்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.