தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜல்லிக்கட்டை தடை செய்தது குறித்து தமிழ் திரையுலகைச்சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்துள்ள நடிகர் தவசி ஒரு அதிரடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பீப் சாங் மாதிரி அவரது பேச்சுக்கு ஆங்காங்கே பீப் சவுண்டு கொடுத்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கியவரைதான் ஒரு பெண் திருமணம் செய்து கொள்வாள் என்கிற நிலை இருந்தது. அதேபோல் சிலம்பாட்ட வீரனாக இருந்தால் ஒரு பொண்ணு வாக்கப்படுவாள். அப்படிப்பட்ட வீரப் பரம்பரை தமிழ் பரம்பரை. இந்த நாட்டில் மாட்டை வெட்டுகிறார்கள், ஆட்டை வெட்டுகிறார்கள். இதையெல்லாம் ஜல்லிக்கட்டை தடுக்கிறவர்கள் போய் பார்க்க வேண்டும். சாமிக்கு விழா எடுக்கறது மாதிரி தமிழர்கள் மட்டும்தான் மாட்டுக்கு விழா எடுக்கிறார்கள். அதை குளிப்பாட்டி, பொட்டு வச்சு, மாலை போட்டு, குழந்தை மாதிரி பாதுகாக்கிறோம். அது மாட்டுத்திருவிழா. அதை எப்படி தடுக்க முடியும்.
இந்த தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப்பத்தி வடநாட்டுக்காரர்களுக்கு என்ன தெரியும். தமிழனை எங்கே போனாலும் அடிக்கிறார்கள். ஆனா எங்க இடத்துல வந்தே எங்களை அடிக்கிறதை பாத்துட்டு சும்மா இருக்க முடியாது. தமிழர்களின் வீரத்தைப்பத்தி தெரியாதவர்கள் ஜல்லிக்கட்டை தடை செய்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினையால் சீக்கிரமே ஒரு புரட்சி வெடிக்கப்போவது என்று அந்த வீடியோவில் ஆவேசமாக பேசியுள்ளார் நடிகர் தவசி.