மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டைரக்டர் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கியுள்ள படம் பேய் இருக்கா இல்லையா. டீம் ஒர்க் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படம் இதுவரை வெளியான பேய் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட காமெடி திரில்லர் கதையில் உருவாகியிருப்பதாக சொல்கிறார் அவர்.
இப்படம் குறித்து ரஞ்சித் பாரிஜாதம் மேலும் கூறுகையில், எனது குருநாதர் ஏ.வெங்கடேஷ் பாணியில் ஆக்சன் படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாக உள்ளது. என்றாலும், நான் முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்ல சென்றபோது, ஏதாவது படம் இயக்கி விட்டு வாருங்கள் என்று சொன் னதால், என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக டீம் ஒர்க் டாக்கீஸ் -என்ற பட நிறுவனத்தை தொடங்கி பேய் இருக்கா இல்லையா படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறேன். எனது இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்து மற்ற இயக்குனர்களுக்கு சான்ஸ் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
மேலும், காமெடி திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அமர், ஜோதிஷா ஜோடியுடன் சுரேஷ், குமார், சதா, திருப்பூர் வாத்தியார் சுப்ரமணியம், விஜயகுமார், லிவிங்ஸ்டன், மதன்பாப், லொள்ளுசபா சாமிநாதன், தாடி பாலாஜி, ஜாங்கிரி மதுமிதா, கொட்டாச்சி, வின்சென்ட்ராய் என ஒரு பெரும் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து, திமிறி எழு -என்ற தலைப்பில் ஒரு ஆக்சன் படம் இயக்குகிறேன். எனது குருநாதர் பாணியில் ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக சில முன்னணி ஹீரோக்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்கிறார் டைரக்டர் ரஞ்சித் பாரிஜாதம்.