தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வன்மம், நையப்புடை, மையம், வெள்ளிக்கிழமை 13-ந்தேதி ஆகிய படங்களில் நடித்தவர் ராண்டில்யா. தற்போது ஒருதடவை பார்க்கலாம், 143, தங்கரதம், இவன் தந்திரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 143 படத்தில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த சேஸிங் காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டு ரத்தம் கொட்டியபோதும், அதே காட்சியில் தொடர்ந்து நடித்திருக்கிறார் அவர்.
அதுகுறித்து ராண்டில்யா கூறும்போது, 143 படத்தை ரிஷி இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். குட்டிப்புலியில் நடித்த வில்லன் ராஜவர்மன் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். அவரது ட்ராக்கில்தான் நானும் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்திலுள்ள ஒரு சாலையில் நடந் தது. அப்போது ஹீரோவை நான் துரத்திக்கொண்டும் ஓடும் காட்சி படமாக்கப் பட்டது. அவரை சாலையில் பிளாக் பண்ணி தாக்கும்போது, அவர் என்னை தள்ளி விடுவார். அப்போது நான் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டேன். எனது கை கால்களில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் சிறிது நேரம் படப்பிடிப்பு ஸ்தம்பித்தது. இருப்பினும், நான் உடனடியாக அந்த காட்சியில் மீண்டும் நடிக்க தயாராகி விட்டேன்.
என்னைப்பொறுத்தவரை எந்த மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். சினிமாவில் பெரிய வில்லனாக வேண்டும் என்பதே எ னது நோக்கமாக இருப்பதால் ரிஸ்க் எடுக்க நான் பயப்படுவதே இல்லை என்று கூறும் ராண்டில்யா, இப்போது நான் வில்லன்களுடன் நடிக்கும் கேரக்டர்களில் நடித்தபோதும் விரைவில் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடிப்பேன் என்கிறார்.