டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா நடிகர், நாடக நடிகர், அரசியல்வாதி, தணிக்கைக்குழுவில் ரிவைசிங் கமிட்டி உறுப்பினர் என பலமுகம் கொண்டவர் நடிகர் எஸ்.வி.சேகர். அவர் முக்கிய வேடத்தில் நடித்த மணல்கயிறு-2 சமீபத்தில் திரைக்கு வந்தது. மேலும், தான் எந்த சினிமா மேடையில் ஏறினாலும், இளவட்ட இயக்குனர்களுக்கு சென்சார் போர்டின் விதிமுறைகள் பற்றி ஏதேனும் ஒரு தகவலை சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் எஸ்.வி.சேகர்.
இந்நிலையில், திரைப்படங்களைப்பார்த்து விட்டு சான்றிதழ் கொடுக்கும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கு சமீபத்தில் அவர் ஒரு அட்வைஸ் கொடுத் துள்ளார். அதாவது, படங்களுக்கு சான்றிதழ் கொடுப்பவர்கள் நடிகராக இருந்தால் தாங்கள் நடித்த படங்களையோ, அல்லது நண்பர்களின் படங்கள், உறவினர்களின் படங்களாக இருக்கும்பட்சத்தில் அதை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். காரணம், வேண்டப்பட்டவர்களின் படங்களைப்பார்த்து சரியான சான்றிதழை கொடுக்க முடியாது. அவர்கள் சென்சார்போர்டின் விதிமுறைகளை மீறிய காட்சிகளை படமாக்கியிருந்தாலும் அது நம்முடைய கண்களுக்கு தவறாக தெரியாது என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.