அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பட்டதாரி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கேரளத்து நடிகை அதிதிமேனன். அதையடுத்து நாங்க வேலைக்கு போயிட்டா ஊர யாரு பாத்துக்கிறது, சந்தனத்தேவன் ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், டைரக்டர் பாலாவின் புதிய படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தபோதும், அமீர் படத்தில் கமிட்டானதால் அந்த படத்திற்கு கால்சீட் கொடுக்க முடியாமல், இயலாமையை தெரிவித்து விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், பலே வெள்ளையத்தேவன் படத்தை அடுத்து இரண்டு படங்களில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார் சசிகுமார். இந்த படங்களில் ஒரு படத்தில் அதிதிமேனன் கமிட்டாகியிருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இதுபற்றி அதிதிமேனனைக்கேட்டால், சசிகுமார் எனக்கு பிடித்தமான நடிகர். அவருடன் கிராமத்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே உள்ளது. ஆனால், அவர் படத்தில் நடிக்க இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. அப்படி அழைப்பு வந்தால் கண்டிப்பாக அந்த படத்தில் நடிப்பேன். தவற விடமாட்டேன் என்கிறார் அதிதிமேனன்.