Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜல்லிக்கட்டு: மவுனம் கலைத்த ரஜினி

15 ஜன, 2017 - 10:17 IST
எழுத்தின் அளவு:
rajini-supports-and-talks-about-jallikattu

ஜல்லிக்கட்டு பிரச்னையில், ரஜினிகாந்த், தனது கருத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர் அரசியல் பிரச்னைகளிலும், மவுனத்தை களைத்து, களத்தில் இறங்குவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


நடிகர் ரஜினி, அரசியலுக்கு வர வேண்டும் என, ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ரஜினியின் புதிய படங்கள் திரைக்கு வரும் முன், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி, அவர் பேசும், பஞ்ச் வசனங்கள், ஊடகங்கள் வழியே கசிந்து, பரபரப்பு ஏற்படுத்தும். இதனால், அவரது புதிய படத்திற்கும், மவுசு ஏற்படும். ஆனால், படம் வெளி வந்த பின், அந்த அலை அடங்கும்.


இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வு காரணமாக, தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை நிரப்ப, தி.மு.க, தலைவர், ஸ்டாலின், முதல்வர், பன்னீர் செல்வம் போன்றோர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


இந்த சூழலை கருத்தில் கொண்டு, ரஜினி அரசியலுக்கு வரலாம் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதை உறுதி செய்யும் வகையில், ஜல்லிக்கட்டு குறித்து, பொங்கல் நாளில், நடிகர் ரஜினி தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.


சென்னையில் நேற்று நடந்த, பத்திரிகை விருது நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி பேசுகையில் ,ஜல்லிக்கட்டுக்கு எந்த விதமான விதிமுறைகளையும் கொண்டு வரலாம். ஆனால், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற, ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த வேண்டியது அவசியம். பெரியவர்கள் வகுத்த கலாச்சாரத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும், என்றார்.


ரஜினியின் இந்த கருத்துக்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்து, இதுவரை அமைதியாக இருந்த ரஜினி, முதல்முறையாக மவுனத்தை கலைத்துள்ளார். அவரது இந்த செயல்பாடு, அரசியலிலும் தொடர வேண்டும் என, ரசிகர்கள் சிலர் கூறினர்.அவர்கள் மேலும் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ளார். எனவே, இனியும் அவர் அமைதியாக இருக்க மாட்டார்; அரசியல் களத்தில் இறங்கி விடுவார் என்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in