ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நயன்தாரா நடித்த மாயா படத்திற்கு இசைய மைத்தவர் ரான் யோஹான். அதன்பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடித்த ஒப்பம் படத்திற்கு இசையமைத்தவர், தற்போது தமிழில் சிகை உள்பட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
மாயா படத்திற்கு பிறகு இசையமைக்கும் படங்கள் பற்றி?
எனது தாத்தா ஜேவிராவ் கிதாரிஸ்ட். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் கிதார் வாசித்தவர். அதே போல் எனது தந்தை ராஜனும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என பலரிடம் கிதார் வாசித்துள்ளார். நான் பியானோ பயின்றேன். பின்னர் ஆல்பம், குறும் படங்களுக்கு இசையமைத்து வந்தேன். அப்போது ஒரு நண்பர் மூலமாக மாயா பட தயாரிப்பாளர் அறிமுகம் கிடைத்து அந்த படத்திறகு இசையமைத்தேன்.மாயாவிற்கு பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான ஒப்பம் படத்திற்கு பின்னணி இசையமைத்தேன். தொடர்ந்து தமிழில் கதிர் நடித்துள்ள சிகை படத்திற்கு இசையமைத்தேன். பின்னணி இசைக்கு ஸ்கோர் உள்ள படம். ஒருநாளில் நடக்கும் கதை. மாயா சினிமாட்டிக்கான படம். சில இடங்களில் பிர மாண்டம் இருக்கும். ஆனால் சிகை ரியாலிடிக்கான படம். வித்தியாசமான கேரக்டர்கள், ரியலாக இருக்கும். மியூசிக்கலாக ஸ்கோப் இருந்தது.விசுவலில் கன்வை பண்ணாத விசயங்களை மியூசிக்கில் சொல்லியிருக்கிறேன்.
மாயா படம் கேரளாவில் 100 நாள் ஓடியது. அதேபோல் ஒப்பம் படமும் 100 நாள் ஓடியது. மேலும், மாயா படத்தை அடுத்து நிறைய ஹாரர் படங்கள் வந்தன. ஆனால் ஹாரர் பண்ண விரும்பவில்லை. தொடர்ந்து அதே மாதிரியான படங்கள் பண்ணினால் என்னை பிராண்ட் பண்ணி விடுவார்கள். அதனால்தான் வேற ஜானர் எதிர்பார்க்கிறேன். ஆக்சன், லவ், பீரியட் பிலிம், சரித்திர படங்கள் பண்ண ஆசை. அந்த மாதிரி கதைகளில் பின்னணி இசைக்கு நிறைய ஸ்கோப் இருக்கும். ஹெவியாக பண்ண வேண்டியதிருக்கும். ஒரு கம்போசராக சேலஞ்சிங்கான படங்களை வரவேற்கிறேன்.
இன்றைய ஆடியன்ஸ் ரசனை?
இப்போது குவாலிட்டி ஹையாக கொடுக்க வேண்டியுள்ளது. காம்பெட்டிசன் ஸ்ட்ராங்காக உள்ளது. கிரியேட்டீவா கொடுத்தா ஆடியன்ஸ் கண்டிப்பா ஏத்துக்குவாங்க. குத்துப்பாட்டை விட, மெலோடிதான் லாங் லைப். இன்றைக்கும் பேவரிட் பாடல் என்று ஒருவரிடம் கேட்டால், மெலோடி பாடலைத்தான் சொல் வார். அது ஹார்ட்டில் போய் உட்கார்ந்து கொள்ளும். இப்போது அந்த மாதிரி பாடல்கள் கம்மியாகி விட்டதாக பீல் பண்ணுகிறேன். 10 வருடத்துக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மைண்ட் செட் சேஞ்சாகி விட்டது. காலசூழலுக் கேற்ப மாறி வருகிறது. செண்டிமென்ட் கதைகள் குறைந்து விட்டது.
மாயா பேய் படமாக இருந்தபோதும், அம்மா செண்டிமென்ட் இருந்தது. அது ரசிகர்களை ஈர்த்தது.
பாதித்த இசையமைப்பாளர்கள்?
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்களைக்கேட்டுதான் நான் வளர்ந்தேன். ரசித்த இசைதான் மைண்டில் இருக்கும். கம்போஸ் பண்ணும்போது என்னையறியாமலேயே அவர்களது சாயல் வர வாய்ப்புள்ளது. ஆனால் முடிந்த அளவுக்கு தவிர்க்கிறேன். எனக்கென ஒரு பாணியை உருவாக்க முயற்சிக்கிறேன்.
ஏ.ஆர்.ரகுமானுக்குப்பிறகு எந்த இசையமைப்பாளரிடமும் தனித்துவம் இல்லையே?
இளையராஜா பண்ணும்போது டிஜிட்டல் வரவில்லை. அவர் இசைக்கருவியில் கை வைக்காமலேயே நோட்ஸ் எழுதிக்கொடுப்பார். ஏ.ஆர்.ரகுமான் வரும்போது டிஜிட்டல் வந்தது. அதனால் சவுண்டே வேற மாதிரி இருப்பதாக சொன்னார்கள். ஆனால் இப்போதும் அதே டிஜிட்டல்தான் உள்ளது. அதனால்தான் தனித்துவம் தெரியவில்லை. சவுண்ட் டெக்னாலஜி மாறினால்தான் இன்னொரு வித்தியாசம் பண்ண முடியும்.
பாடல்கள் மூலம் இன்னும் ரசிகர்களை ஈர்க்கவில்லையே?
மாயா படத்தை இன்வால்வ் பண்ணி பார்த்தார்கள். ஆனால் எனக்கு வந்த படங்களில் பாடல்கள் அதிகமாக இல்லை. பின்னணி ஸ்கோர்தான் அதிகமாக உள்ளது. பாடல்கள் அதிகமாக இருக்கும்போதுதான் ரசிகர்களை ரீச் பண்ண முடியும். மாயா ஹாரர், சிகை சோசியல் திரில்லர். இதில் கமர்சியல் இல்லை. அந்த மாதிரி கமர்சியல் கதைகளை எதிர்பார்க்கிறேன். அப்படி கிடைக்கும்போது ரசிகர்களின் மனதை தொடும் பாடல்களை கொடுப்பேன்.
சமீபகாலமாக ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் வருவதில்லையே?
கதைகள் மற்றும் பாடல்களில் சூழல் மாறிவிட்டதால் அதற்கேற்ப பாடல் கொடுக்க வேண்டியுள்ளது. சலங்கை ஒலி மாதிரியான படங்கள் வந்தால்தான் அந்த மாதிரியான பாடல்களை கொடுக்க முடியும். இருப்பினும் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ராகத்தை மையப்படுத்தி ஜி.வி.பிரகாஷ் பாடல் கள் பண்ணியிருந்தார். அதன்பிறகு அந்த மாதிரி நானும் கேட்கவில்லை. ராகத்தை பேஸ் பண்ணி பண்ணுவது கம்மியாகி விட்டது. அந்த பீலில் படம் இருந்தால்தான் பாடல்கள் கொடுக்க முடியும். அதுமாதிரி வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன். மேலும், இசையில் ஸ்டோரி டெல்லிங் இருக்க வேண்டும். என் இசையில் அதை வெளிப்படுத்தி வருகிறேன்.
இசையமைப்பாளர்கள் நடிகர்களாகி வருகிறார்களே?
எனக்கு நடிக்கிற ஆசை இல்லை. இசை பரம்பரையில் இருந்து வந்தவன் என்பதால், எனது 4 வயசிலேயே நான் இசையமைப்பாளராக வேண்டும் என்றுதான் சொல்வேன். அதே லைனில்தான் வந்திருக்கிறேன். என் முழு கவனமும் இசையில்தான் உள்ளது. நடிக்க வேண்டுமென்ற ஆசை துளியும் இல்லை. வாய்ப்பு வந்தால்கூட ஏற்கமாட்டேன். இசையில் சாதிக்க வேண்டும் என்பதில்தான் எனது முழு நோக்கமும் உள்ளது என்கிறார் இசையமைப்பாளர் ரான் யோஹான்.