மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜல்லிக்கட்டு விவகாரம் பீட்டாவில் உறுப்பினராக இருந்து வரும் திரிஷாவை ஒருவழி பண்ணி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இது சம்பந்தமாக ஏற்கனவே திரிஷாவுக்கு இணையதளங்களில் எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், பொங்கல் நெருங்கியபோது இன்னும் அதிகப்படியான எதிர்ப்புகள் எழுந்தன. அதோடு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை என்றதும் ஜல்லிக்கட்டு ஆர்வ லர்கள் தங்களது கோபத்தை பீட்டா அமைப்பின் மீது திருப்பியதோடு, நடிகை திரிஷாவையும் கண்டிபடி திட்டித்தீர்த்தனர். அதோடு, திரிஷாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் வெளியிட்டனர்.
அதையடுத்து, ஒரு பெண்ணை மதிக்கத்தெரியாத நீங்களெல்லாம் தமிழர்களா? என்று டுவிட் செய்திருந்தார் திரிஷா. ஆனால் அதன்பிறகு எவ்வளவு பழமையான கலாச்சாரமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என்றொரு டுவிட்டை வெளியிட்டிருந்தார் திரிஷா. இதனால் ஏற்கனவே கொதிப்பில் இருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் திரிஷாவை இன்னும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
அதையடுத்து, தனது டுவிட்டரை யாரோ ஹேக் செய்து விட்டதாக தனது பேஸ்புக் மூலம் தெரிவித்த திரிஷா, ஜல்லிக்கட்டை தடை செய்ய தான் டுவிட் போடவில்லை என்று கூறியவர், இப்போது டுவிட்டரையே செயலிழக்க செய்து விட்டு வெளியேறி விட்டார்.