நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
மலையாளத்தில் என்ட பெரியத்தமன் என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரியாஸ்ரீ. தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த அவர், தமிழில் வாங்க வாங்க என்ற படத்தில் என்ட்ரியானார். தற்போது நெறி, செந்தாழம்பூவே ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி ஸ்ரியாஸ்ரீ கூறும்போது, மலையாளத்தில் பல படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில்தான் நடித்தேன். அதனால் சில படங்களிலேயே மலையாள ரசிகர்களை கவர்ந்து விட்டேன. இருப்பினும், தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் வாங்க வாங்க படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தேன். தற்போது நெறி, செந்தாழம்பூவே ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறேன். இந்த படங்கள் வெளியாகும்போது தமிழில் ஒரு இடத்தை பிடித்து விடுவேன். அதேசமயம், என் திறமைக்கு சவால் விடக்கூடிய எந்தமாதிரியான வேடத்திலும் நடிபபேன். ஆனால் கிளாமராக நடிக் கமாட்டேன். டைரக்டர்கள் வற்புறுத்தினால் லிமிட் வைத்து நடிப்பேன்.
மேலும், என்னை கவர்ந்த நடிகை ஷோபனா. தமிழில் ரஜினி-மம்மூட்டி நடித்த தளபதி படத்தில் அவரை பார்த்தபோதுதான் அவரது ரசிகையானேன். அதோடு நானும் அவரைப்போலவே பரதநாட்டிய கலைஞர். அதனால், ஷோபனாவை போன்ற ஒரு நடிகையாக சினிமாவில் இடம்பிடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஸ்ரியாஸ்ரீ, அவர் பாணியில் நடிக்கவும் விரும்புகிறாராம்.