தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சபரிமலை, இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் பற்றி பாடல்கள் பாடி வருபவர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஆண்டு தோறும் ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஜேசுதாஸ், விஜயன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு விருதுக்கு இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான கங்கை அமரன் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கும் விழா சன்னிதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விருதை வழங்கி கவுரவித்தார். ஒரு லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை விருதில் அடங்கும். இந்த விழாவில் தேவசம்போர்டுதலைவர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர் அஜய், ராகவன் நடிகர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.