விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சென்னை: அசாதாரண திறமைகளை கொண்டவர் சோ என துக்ளக் பத்திரிகையின் 47-வது ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது:
சோ அசாதாரண திறமைகளை கொண்டவர்.அவர் இல்லாத விழாவில் பேசுவது வருத்தம் அளிக்கிறது, பன்முக திறமையுடன்,நகைச்சுவை உணர்வும் கொண்டவர். தமிழகத்தில் சோவிடம் கருத்து கேட்காத அரசியல் தலைவர்களே கிடையாது. அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்ய தயங்காதவர். சோவிடம் அரசியல் ஆலோசனை கேட்டால் அது சரியாக இருக்கும்.
மொரார்ஜி தேசாய் முதல் மோடி வரை சோவுக்கு நல்ல நண்பர்கள். உண்மையாகவும் சுயநலமின்றி வாழ்ந்தவர் சோ.தமிழகத்தில் ஜெ., மறைவுக்கு பிறகு தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை வருத்தம் அளிக்கிறது.இந்த நேரத்தில் சோ இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். .
விழாவில் பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.