'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு பெருகி வரும் வேளையில் பீட்டா அமைப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதோடு பீட்டாவில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் நடிகர் ஆர்யா, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் சிக்கி கொண்டனர். அதிலும் மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த போராட்டில் ஆர்யா, அமீர், யுவன் உள்ளிட்டோர் பங்கேற்க வந்தனர். ஆனால், ஆர்யா பீட்டாவில் உறுப்பினராக இருப்பதாக கூறி அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், அமீர் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் சந்தனதேவன் படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர்... ‛‛பீட்டாவிற்கும், ஆர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஒருவருடமாகவே சந்தனதேவன் படம் பற்றி ஆர்யாவும், நானும் பேசியிருக்கிறோம். ஜல்லிக்கட்டு காட்சியில் நானே நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார், இது ரிஸ்க் என்று சொல்லியும் அவர் அந்த ரிஸ்க்கை ஏற்று கொள்ள தயார் என்றார். டுவிட்டரில் ஜல்லிக்கட்டு என்ன என்று...? கேட்டது உண்மை, அவர் சொல்ல வந்த விஷயமே வேறு. ஆனால் அது வேறு விதமாக மாறிவிட்டது. ஆர்யா ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாளர், அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது'' என்று கூறினார்.
ஆர்யா பேசும்போது... ‛‛பீட்டாவில் நான் உறுப்பினரும் கிடையாது, அதில் நான் தூதரும் இல்லை. ஜல்லிக்கட்டு என்ன என்று தெரியாமல் யாராவது இருக்க முடியுமா...?, நான் விளையாட்டுக்காக போட்ட ஒரு விஷயம் பிரச்னையாகிவிட்டது. மீம்ஸ் போட அன்றைக்கு ஒரு ஆடு மாட்டிவிட்டது, அது நான் தான். அதை நான் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரத்திற்கு தேவை, அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கணும்'' என்று கூறியுள்ளார்.