'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
வேல்ராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான வெற்றி படம் ‛வேலையில்லா பட்டதாரி'. தற்போது இதன் இரண்டாம் பாகம் விஐபி-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. தனுஷ் - அமலாபால் ஜோடியே இதிலும் தொடர்கிறது. இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பை ரஜினி துவக்கி வைத்தார். தற்போது இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழர் திருவிழாவான பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் விஐபி-2 படக்குழுவினரும் பொங்கலை கொண்டாடினர். சென்னையில் விஐபி-2 படத்தின் ஷூட்டிங்கில் தனுஷ், செளந்தர்யா ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த நிகழ்வின் போது நடிகர் தனுஷ், விஐபி-2 படத்தில் பணியாற்றும் கேமராமேன், ஆர்ட் டைரக்டர்கள், புரொடக்ஷ்ன்ஸ் மேனேஜர், லைட்மேன் உள்ளிட்ட 200 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கினார்.
கடந்த பொங்கலின் போது ‛கொடி' படப்பிடிப்பில் இருந்த தனுஷ், அப்போது படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் பேண்ட்-சர்ட் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.