இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
மலையாள திரையுலகில் புதிய படங்களை திரையிடுவது தொடர்பான பிரச்சனை தொடங்கி விளையாட்டுப்போல ஒருமாதம் ஓடிவிட்டது. ஆனால் இன்றுவரை சுமுகமான முடிவுகள் எட்டப்படாமல், வெளியாகவேண்டிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் உட்பட பல படங்கள் ரிலீஸாகாமல் முடங்கி கிடக்கின்றன.. இந்த பிரச்சனையில் தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் இருவரும் ஓரணியாகவும் எக்சிபிடர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் எதிரணியாகவும் நிற்கின்றனர்.. இதனால் எக்சிபிடர்ஸ் சங்கத்தில் இல்லாத தியேட்டர்களாக, அதாவது 'பி' கிளாஸ் தியேட்டர்களாக தேடிப்பிடித்து தங்களது படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்
இந்தநிலையில் நடிகர்கள் தரப்பில் இருந்து முதல் ஆளாக இந்தப்பிரச்சனை குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகர் பிருத்விராஜ். இதுபற்றி அவர் கூறும்போது, “தியேட்டர் அதிபர்கள் கேட்கும் 50-50 என்கிற பங்கு சதவீதம் ஏற்கமுடியாத ஒன்று.. நானும் ஒரு தயாரிப்பாளர் என்கிற ரீதியில் பேசவில்லை.. சினிமா வியாபாரத்தை இத்தனை நாட்கள் கவனித்து வரும் ஒரு சாதாரண ஆளாகத்தான் இதை சொல்கிறேன். குறிப்பாக கடந்த 2015-2016 ஆம் ஆண்டுகள் மலையாள சினிமாவின் வசூலில் புதிய சரித்திரம் எழுதின. தியேட்டர்காரர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.. அப்படி இருக்கையில் மலையாள சினிமாவையே ஸ்தம்பிக்க வைக்கும் இந்த ஸ்ட்ரைக் தேவையற்றது.” என கூறியுள்ளார் பிருத்விராஜ்..
பிருத்விராஜ் நடித்த 'எஸ்றா' படம் கடந்த மாதமே திரைக்கு வருவதாக இருந்தது.. ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் ஸ்ட்ரைக்கால் அது நடக்காமல் போனது.. இப்போது தயாரிப்பளர்களின் மாற்றுத்திட்ட ஏற்பாட்டின்படி வரும் ஜன-19ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.