தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குற்றமே தண்டனை படத்திற்கு பிறகு அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் விதார்த். குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு, கடோத் கஜன், வண்டி, பில்லா பாண்டி, 88 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் குரங்கு பொம்மை, வண்டி படங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு கிடாயின் கருணை மனு படப்பிடிப்பு முடிந்து திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே விதார்த் நடித்து வருடக்கணக்கில் வெளியாகாமல் இருக்கும் படங்களில் ஒன்றான விழித்திரு படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கிய இந்த படத்தில் விதார்த்துடன் கிருஷ்ணா, தம்பிராமைய்யா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் திருடன் வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி யு சான்றிதழ் கிடைக்கவில்லையாம். மூன்று முறை தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்ட அப்படம் தற்போது ரிவைசிங் கமிட்டிக்கு சென்றிருக்கிறது.