டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குற்றமே தண்டனை படத்திற்கு பிறகு அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் விதார்த். குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு, கடோத் கஜன், வண்டி, பில்லா பாண்டி, 88 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் குரங்கு பொம்மை, வண்டி படங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு கிடாயின் கருணை மனு படப்பிடிப்பு முடிந்து திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே விதார்த் நடித்து வருடக்கணக்கில் வெளியாகாமல் இருக்கும் படங்களில் ஒன்றான விழித்திரு படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கிய இந்த படத்தில் விதார்த்துடன் கிருஷ்ணா, தம்பிராமைய்யா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் திருடன் வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி யு சான்றிதழ் கிடைக்கவில்லையாம். மூன்று முறை தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்ட அப்படம் தற்போது ரிவைசிங் கமிட்டிக்கு சென்றிருக்கிறது.