மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார்கள் தமிழர்கள். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை, அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி ஏராளமான மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தினர்.
இந்தப்போராட்டத்தில் இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யா மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவிக்க வந்ததனர். ஆனால் ஆர்யா, பீட்டாவிற்கு ஆதரவானவர் என்று கூறி சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
அமீர், ஆர்யா, யுவன் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சிறு தடியடி நடத்தி கலைத்தனர். இதில் இயக்குநர் கெளதமன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதின் போது இயக்குநர் கெளதமனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஆர்யா தற்போது அமீர் இயக்கத்தில் சந்தனதேவன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.