'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
பொங்கி எழு மனோகரா, விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும், சைத்தான் ஆகிய படங்களில் நடித்தவர் அருந்ததி நாயர். கேரளத்து நடிகையான இவர் சைத்தான் படத்தை முடித்ததும் தாய்மொழியான மலையாளத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் அந்த படத்திற்கு அவர் கால்சீட் கொடுத்த நேரம் பார்த்து சிபிராஜ்-விஷ்ணு நடிக்கும் படங்களில் நடிப்பதற்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால் மலையாள படத்திற்கு அவர் கால்சீட் கொடுத்த அதே தேதியை கேட்டதால் இந்த படங்களை அவரால் ஏற்க முடியவில்லையாம்.
மேலும், சைத்தானுக்குப்பிறகு தமிழில் இந்த இரண்டு படவாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க முடியாமல் போனதை நினைத்து பீல் பண்ணும் அருந்ததி நாயர், அடுத்தபடியாக யாரடி நீ மோகினி, குட்டி படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான 100 டிகிரி செல்சியஸ் -என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான அப்படத்தில் மலையாளத்தில் அனன்யா நடித்த வேடத்தில் நடிக்கிறார் அருந்ததி நாயர். தற்போது நடித்து வரும் மலையாள படத்தில் நடித்து முடித்ததும் பிப்ரவரி மாதத்தில் மித்ரவ் ஜவகர் படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார் அருந்ததிநாயர்.