சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அதற்கு தடை கோரும் பீட்டா அமைப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உரக்க குரல் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, பீட்டாவில் ஒரு அங்கமாக உள்ளார். தற்போது இவர் ‛கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வருகிறது. நேற்று காரைக்குடி அருகே நேமத்தான்பட்டி என்ற ஊரில் கர்ஜனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது அங்கு வந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், த்ரிஷா படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. மேலும் த்ரிஷாவிற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. அதோடு அவர் இறந்து போனதாக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் வெளியானது.
இந்நிலையில் த்ரிஷா இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை. என்னை இறந்துவிட்டதாக சித்தரித்து, என் குடும்பத்தையும் தரக்குறைவாக பேசியது என்னை அதிர்ச்சி அடைய செய்தது. சமூக வலைதளங்களை இலவசமாக பயன்படுத்துவது தான் இதுபோன்ற மோசமான செயலுக்கு காரணம்.
ஒரு பெண்ணையும், அவரது குடும்பத்தையும் மதிக்க தெரியாதவர்கள், மரியாதை குறைவாக நடத்துவது தமிழனின் கலாச்சாரமா...?, இந்த செயலுக்கு தமிழன் வெட்கப்பட வேண்டும். சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் செயல்களுக்காக தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு த்ரிஷா கூறியுள்ளார்.