‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல மலையாள இயக்குனர் கமல் பாலிவுட் நடிகை வித்யாபாலனை வைத்து இயக்குவதற்காக தயாரான படம் தான் 'ஆமி'. மலையாள சினிமாவுக்கு வரமாட்டேன் என அடம்பிடித்த வித்யாபாலனையே நடிக்க ஒப்புக்கொள்ள வைத்த இந்த 'ஆமி' படத்தின் கதையின் நாயகி தான் கமலா சுரையா.. யார் இந்த கமலா சுரையா..? கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் கமலா தாஸ் ஆக பிறந்தவர்... மாதவிக்குட்டி என்கிற புனைப்பெயர் கொண்டவர்.. பிற்பாடு நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்தவர். பின்னர் இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மையின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல்.
ஒரு பெண் எழுத்தாளரின் சுயசரிதையில் நடிக்கப்போகிறோம் என்பதாலேயே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் வித்யாபாலன். ஆனால் சமீப நாட்களாக என்ன நடந்ததோ தெரியவில்லை இந்தப்படத்தில் இருந்து வித்யாபாலன் விலகிவிட்டார் என கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஒன்று, இந்தப்படத்தின் கதை நாயகியான கமலா என்கிற மாதவிக்குட்டி பற்றிய வித்யாபாலனின் பல கேள்விகளுக்கு இயக்குனர் கமல் மற்றும் கதாசிரியர் டீம் சரியான பதிலை சொல்லவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த வித்யாபாலன் இந்தப்படத்தில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.. ஆனால் இன்னொரு தரப்பினர் சொல்லும் பதில் வேறுமாதிரியாக இருக்கிறது..
அதாவது சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விஷயத்தில் இயக்குனர் கமல் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அதுகுறித்து அவர் மீது பல பக்கங்களில் இருந்து கண்டன கணைகள் பாய்ந்தன. 'பாகிஸ்தானுக்கு போ' என்கிற அளவில் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இந்த சர்ச்சைகளினால் தான் கமல் படத்தில் நடிக்கவேண்டாம் என மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாகவும் அதனாலேயே இந்தப்படத்தில் இருந்து வித்யாபாலன் விலகியதாகவும் சொல்லப்படுகிறது.