டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அமீர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் ‛சந்தனதேவன்'. ஆர்யா, அவரது தம்பி சத்யா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஹீரோயினாக அதிதி மேனன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ஜல்லிக்கட்டு பற்றிய பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில்...
முதலில் ஜல்லிக்கட்டு தமிழ் வார்த்தையே கிடையாது, வட்டார வழக்கில் மாடு பிடித்தல் என்றும், இலக்கிய சொல்லில் ஏழு தழுவதல் என்றும் அழைக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு, தமிழர்கள் அல்லாத மாற்று கலாச்சாரவாதிகள் மற்றும் ஜல்லிக்கட்டை எதிர்க்கும் மற்றவர்களையும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன். எங்கள் தமிழர்கள் சொல்லில் பண்பாடு வைத்திருக்கிறார்கள். தழுவுதல் என்றால் காயப்படுத்துதல் கிடையாது. தாய், பிள்ளையை தழுவுதல், காதலி, காதலனை தழுவுதல் எல்லாம் காயம் ஏற்படுகிறதா...?, அதுபோன்று தான் மாட்டின் மீது ஏறு தழுவுதழும். இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் வைத்திருந்தாலே போதும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற நிலையே தேவைப்பட்டிருக்காது.
ஏறு தழுவுதல் குற்றம் என்றால் சிவபெருமானை என்ன செய்வீர்கள்...?, சிவனை கடவுளாக பாவித்தது எல்லாம் நம் இந்து மதத்தின் நம்பிக்கை. நான் அறிந்த வரை மானூட வரலாற்றின் படி எவன் ஒருவன் காட்டில் உள்ள மாட்டை அடக்கி, அதன் மீது ஏறி சவாரி செய்கிறானோ அவனை சிவன் பெருமான் என்று நம் தமிழ் இனம் வழங்கியது. அதனால் அந்த மாட்டை பெருமானுக்கு வழங்கி சிவபெருமான் என்று அழகு பார்த்தது. இது தவறு என்றால் எந்த விதியின் படி சிவனை கைது செய்வீர்கள்...? முடியுமா... முடியாது.
ஜல்லிக்கட்டால் மாடுகள் காயமுறுகிறது என்கிறார்கள், கண்டிப்பாக இல்லை. மாடுகளுக்கு தான் எங்கள் வீட்டில் முதல்மரியாதை. உழவன் பட்டினி கிடப்பான், ஜல்லிக்கட்டு மாட்டை பட்டினி போட மாட்டான். மாடுகளை வளர்ப்பவன் தான் பசியுடன் இருப்பானே தவிர மாடுகளை பட்டினி போட மாட்டான். மனிதன் சாகாத விளையாட்டு என்று ஒன்று உள்ளதா...?, விபத்து இல்லாத விளையாட்டு உண்டா...?, மாடு முட்டி பிழைத்தவனும் உண்டு, கல் தடுக்கி செத்தவனும் உண்டு. கொண்டாட்டங்களை கொண்டு வந்ததே மக்களை ஒன்று சேர்க்க தான். மனித வாழ்வில் ருசி சேர்க்க தான். கொண்டாட்டங்கள் தமிழர்களின் பரம்பரை அடையாளங்கள், எங்களின் மறை எழுச்சிகள்'' என்று கூறியுள்ளார்.