ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான ஆதரவு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆங்காங்கே தடையை மீறி ஜல்லிக்கட்டும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் அதேவேளையில் பீட்டாவிற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, பீட்டாவில் ஒரு அங்கமாக உள்ளார். தற்போது இவர் ‛கர்ஜனை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வருகிறது. இன்று காரைக்குடி அருகே நேமத்தான்பட்டி என்ற ஊரில் கர்ஜனை படப்பிடிப்பு நடந்தது.
இதையறிந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சுமார் 70பேர் திரண்டு த்ரிஷா படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதோடு, த்ரிஷாவுக்கு எதிராக கோஷங்களும் முழங்கினர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிலைமை சரியாக இல்லாததை உணர்ந்த கர்ஜனை படப்பிடிப்பு குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி, அங்கிருந்து கிளம்பி சென்றனர். முன்னதாக த்ரிஷா படப்பிடிப்புக்கு வருவதாக இருந்தது, ஆனால் இந்த எதிர்ப்பால் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வராமல் இருந்துவிட்டார்.
த்ரிஷாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : இதனிடையே பீட்டாவில் உள்ள த்ரிஷாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிகட்டு ஆதரவாளர்கள் சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.