டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை ரம்பா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா, விஐபி, அருணாச்சலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார்.
இந்த நிலையில் ரம்பாவின் அண்ணன் வாசுவின் மனைவி பல்லவி தனது கணவர் வாசு, மற்றும் நடிகை ரம்பா மீது ஐதராபாத் நீதிமன்றத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார். தன்னிடம் வரதட்சணை கேட்டு கணவர் வாசுவும், ரம்பாவும் கொடுமைப்படுத்தியதாக தனது வழக்கில் பல்லவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படியும், கோர்ட்டில் ஆஜராகும்படியும் நீதிமன்றம் ரம்பாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ரம்பா கனடாவில் இருந்தால் அவரால் ஆஜராக முடியவில்லை. இந்த வழக்கில் அண்ணன் வாசு ஆஜராகி வந்தார். இந்த நிலையில் ரம்பா இந்தியா வந்திருப்பதாக போலீசுக்கு பல்லவி தகவல் கொடுத்தார். இதனால் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரம்பாவுக்கு ஐதராபாத் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ரம்பா, தற்போது ஐதராபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். கணவனை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் இந்தியா வந்துவிட்ட ரம்பா, கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.