இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் டோலிவுட்டிற்கு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் சிரஞ்சீவிக்கு படத்தின் தற்போதைய வசூல் திருப்தி அளித்துள்ளது. இதனுடன் பவன் கல்யாண் ரசிகர்களையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் லாபம் பார்க்கலாம் என திட்டமிட்டுள்ள இப்படத்தின் புரமோஷன் டீம் பவன் கல்யாணுக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்ட ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
கைதி நம்பர் 150 படத்தின் வசூல் நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அல்லு அரவிந்த், இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ 47 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் சிரஞ்சீவியின் சகோதரரும் பவர் ஸ்டார் நடிகருமான பவன் கல்யாணுக்கு கைதி நம்பர் 150 படத்தை திரையிட்டுக்காட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். கைதி நம்பர் 150 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வராததால் பவன் கல்யாண் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.