ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்துள்ளார். என்.டி.ஆரின் கனவு திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி படத்தை பாலகிருஷ்ணா தனது 100வது படமாக மாற்றி வெற்றியை பதிவு செய்துள்ளார். இன்று(ஜனவரி 12) திரைக்கு வந்துள்ள இப்படத்தை, பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு படக்குழு திரையிட்டுக் காட்டியுள்ளனர். படம் பார்த்த ராஜமௌலி தனது வாழ்த்துக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சடர்கனி வேடம் ஏற்று நடித்ததற்காக முதலில் பாலகிருஷ்ணாவிற்கு தலைவணங்குவதாகக் கூறியுள்ள ராஜமௌலி, இதனால் பாலகிருஷ்ணா அவரது தந்தை என்.டி.ஆரை பெருமைப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மக்களின் இதயத்தை இயக்குனர் க்ரிஷ் வென்றுவிட்டதாக ராஜமௌலி பாராட்டியுள்ளார்.