பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்களில் இவ்வளவு தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் வழக்கத்திற்கு மாறாக டிக்கெட் கட்டணம் பல மடங்கு வரை உயர்த்தி விற்கப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விஜய் நடிப்பில் பைரவா படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக தமிழக மற்றும் பைரவா பட தயாரிப்பாளர் விளக்கம் அளிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது புகார் செய்ய மாவட்டந்தோறும் புகார் எண்கள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என்று கோர்ட் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் ‛பைரவா' தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பைரவா மற்றும் சிங்கம் 3 படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதோடு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதோடு வழக்கை 3வாரத்திற்கு தள்ளி வைத்தார்.