ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்ஜிஆரைப்போன்று ரஜினிகாந்தும் அரசியலில் பிரவேசம் செய்வார் என்பதுதான் அவரது ரசிகர்களின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதற்கேற்ப அவரும் பல தேர்தல் காலங்களில் சில அரசியல் கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களையும் அதிரடியாக சொல்லி வந்தததால் அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதப்பட்டு வந்தது.
ஆனால் சமீபகாலமாக தன்னை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்தால்கூட இது அரசியல் சம்பந்தப்பட்ட சந்திப்பு அல்ல, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறி வருகிறார் ரஜினி. அரசியலில் ஈடுபாடு இல்லாதது போலவே காண்பித்துக்கொள்கிறார். இந்த நிலையில், ரஜினியைப்பற்றி பா.ஜ.கவின் சுப்ரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ரஜினிகாந்த் எதிலும் நிலை யானவர் அல்ல. அதனால் அவர் அரசியலுக்கு வர தகுதியானவர் இல்லை. தமிழக அரசியலில் ரஜினிக்கு எந்தவித எதிர்காலமும் இல்லை என்று கூறியுள்ளார். சுப்ரமணியசாமியின் இந்த அதிரடியான கருத்தினால் ரஜினி ரசிகர்கள் கொந்த ளித்துள்ளனர்.