தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மதயானைக்கூட்டம், கிருமி படங்களில் நாயகனாக நடித்தவர் கதிர். அதையடுத்து சிகை என்ற திரில்லர் படத்தில் நடித்து வந்தவர், தற்போது என்னோடு விளையாடு, சத்ரு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் பரியேறும் பெருமாள் படத்தை கபாலி டைரக்டர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார்.
இதுபற்றி கதிர் கூறுகையில், இந்த 2017ம் ஆண்டு எனக்கு மிகச்சிறப்பான ஆண்டாக தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில் நான் நல்ல படங்களில் நடித்தபோதும், கமர்சியல் ஹீரோவாக எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது நான் நடித்து வரும் எல்லா படங்களும் பக்கா கமர்சியல் படங்கள். அதனால் நானும் இப்போது கமர்சியல் வட்டத்திற்குள் வந்து விட் டேன்.
குறிப்பாக, சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் படங்களில் சிங்கிள் ஹீரோவாக நடித்தபோதும், என்னோடு விளையாடு படத்தில் பரத்துடனும், விக்ரம் வேதாவில் மாதவன், விஜயசேதுபதியுடனும் இணைந்து நடிக்கிறேன். சீனியர் நடிகர்களு டன் இணைந்து நடிப்பது நல்ல அனுபவமாக உள்ளது. நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது போன்ற உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டில் திரைக்கு வரும் இந்த 5 படங்களுமே எனக்கு வெற்றிப்படங்களாக அமைந்து என்னை கமர்சியல் ஹீரோவாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கூறும் கதிர், பரியேறும் பெருமாள் படத்திற்கு இதுதான் தலைப்பு என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த தலைப்பு மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்.