ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவில் இஹற்கு முன்னரும் கூட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் தியேட்டர்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றதுண்டு.. ஆனால் அவை ஒருசில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.. ஆனால் இந்தமுறை தியேட்டர்கள் அதிக பங்குத்தொகை கேட்டு புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுற போகிறது.. ஸ்ட்ரைக் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதில் தலையிட்டு, புதிதாக விசாரணை கமிஷன் அமைக்கும் வரை பழைய முறை தொடரட்டும் என்றார்..
இதற்கு தியேட்டர் எக்சிபிடர்ஸ் பெடரேஷன் சார்பில் சம்மதித்தாலும், அவர்களால் காயம் பட்ட தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ளவில்லை. எக்சிபிடர்ஸ் சங்கத்தில் இல்லாத தியேட்டர்களாக, அதாவது பில் கிளாஸ் தியேட்டர்களாக தேடிப்பிடித்து தங்களது படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர்.. இது ஒருபக்கம் இருக்க, கேரள திரைப்பட வளர்ச்சி கழகம் கேரள மாநிலம் முழுவதுமாக மொத்தம் நூறு தியேட்டர்களை புதிதாக நிர்மாணிக்க தீர்மானித்துள்ளது.