‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாள சினிமாவில் இஹற்கு முன்னரும் கூட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் தியேட்டர்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றதுண்டு.. ஆனால் அவை ஒருசில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.. ஆனால் இந்தமுறை தியேட்டர்கள் அதிக பங்குத்தொகை கேட்டு புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுற போகிறது.. ஸ்ட்ரைக் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதில் தலையிட்டு, புதிதாக விசாரணை கமிஷன் அமைக்கும் வரை பழைய முறை தொடரட்டும் என்றார்..
இதற்கு தியேட்டர் எக்சிபிடர்ஸ் பெடரேஷன் சார்பில் சம்மதித்தாலும், அவர்களால் காயம் பட்ட தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ளவில்லை. எக்சிபிடர்ஸ் சங்கத்தில் இல்லாத தியேட்டர்களாக, அதாவது பில் கிளாஸ் தியேட்டர்களாக தேடிப்பிடித்து தங்களது படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர்.. இது ஒருபக்கம் இருக்க, கேரள திரைப்பட வளர்ச்சி கழகம் கேரள மாநிலம் முழுவதுமாக மொத்தம் நூறு தியேட்டர்களை புதிதாக நிர்மாணிக்க தீர்மானித்துள்ளது.