இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள சினிமாவில் இஹற்கு முன்னரும் கூட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் தியேட்டர்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றதுண்டு.. ஆனால் அவை ஒருசில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.. ஆனால் இந்தமுறை தியேட்டர்கள் அதிக பங்குத்தொகை கேட்டு புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுற போகிறது.. ஸ்ட்ரைக் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதில் தலையிட்டு, புதிதாக விசாரணை கமிஷன் அமைக்கும் வரை பழைய முறை தொடரட்டும் என்றார்..
இதற்கு தியேட்டர் எக்சிபிடர்ஸ் பெடரேஷன் சார்பில் சம்மதித்தாலும், அவர்களால் காயம் பட்ட தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ளவில்லை. எக்சிபிடர்ஸ் சங்கத்தில் இல்லாத தியேட்டர்களாக, அதாவது பில் கிளாஸ் தியேட்டர்களாக தேடிப்பிடித்து தங்களது படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர்.. இது ஒருபக்கம் இருக்க, கேரள திரைப்பட வளர்ச்சி கழகம் கேரள மாநிலம் முழுவதுமாக மொத்தம் நூறு தியேட்டர்களை புதிதாக நிர்மாணிக்க தீர்மானித்துள்ளது.