இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கேரளாவில் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பிரச்சனையால் அங்கு புதிய திரைப்படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை 'பைரவா' தமிழ்ப் படம் அங்கு பல தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால், மற்ற தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் போனால் வினியோகஸ்தருக்கு பெரும் நஷ்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பைரவா' படத்தைத் தங்களது தியேட்டர்களில் வெளியிட ஏற்கெனவே தியேட்டர்காரர்கள் ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம். அதை மீறி அவர்கள் படத்தை வெளியிடாமல் போனால் இந்தியப் போட்டி ஆணையத்திடம் அவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என பத்திரிகை விளம்பரம் மூலம் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதனால் கேரளத் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.