தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு தடைகேட்ட தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி கே.ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதியை பொதுக்குழுவை கூட்டி முறையாக அறிவிக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். அதோடு தேர்தல் கட்டணத்தை தலைவர் பதவிக்கு ஒரு லட்சம் மற்ற பதவிகளுக்கு 50 ஆயிரம், 10 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடக்கூட இவ்வளவு கட்டணம் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தில் 70 சதவிகிதம் பேர் சிறு தயாரிப்பாளர்கள் அவர்களால் இந்த கட்டணத்தை கட்ட முடியாது. அதுவும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தயாரிப்பாளர் சங்க செயற்குழுவிற்கு அதிகாரமில்லை.