ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு தடைகேட்ட தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி கே.ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதியை பொதுக்குழுவை கூட்டி முறையாக அறிவிக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். அதோடு தேர்தல் கட்டணத்தை தலைவர் பதவிக்கு ஒரு லட்சம் மற்ற பதவிகளுக்கு 50 ஆயிரம், 10 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடக்கூட இவ்வளவு கட்டணம் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தில் 70 சதவிகிதம் பேர் சிறு தயாரிப்பாளர்கள் அவர்களால் இந்த கட்டணத்தை கட்ட முடியாது. அதுவும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தயாரிப்பாளர் சங்க செயற்குழுவிற்கு அதிகாரமில்லை.