ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு தடைகேட்ட தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி கே.ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதியை பொதுக்குழுவை கூட்டி முறையாக அறிவிக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். அதோடு தேர்தல் கட்டணத்தை தலைவர் பதவிக்கு ஒரு லட்சம் மற்ற பதவிகளுக்கு 50 ஆயிரம், 10 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடக்கூட இவ்வளவு கட்டணம் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தில் 70 சதவிகிதம் பேர் சிறு தயாரிப்பாளர்கள் அவர்களால் இந்த கட்டணத்தை கட்ட முடியாது. அதுவும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தயாரிப்பாளர் சங்க செயற்குழுவிற்கு அதிகாரமில்லை.