வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு தடைகேட்ட தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி கே.ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதியை பொதுக்குழுவை கூட்டி முறையாக அறிவிக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். அதோடு தேர்தல் கட்டணத்தை தலைவர் பதவிக்கு ஒரு லட்சம் மற்ற பதவிகளுக்கு 50 ஆயிரம், 10 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடக்கூட இவ்வளவு கட்டணம் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தில் 70 சதவிகிதம் பேர் சிறு தயாரிப்பாளர்கள் அவர்களால் இந்த கட்டணத்தை கட்ட முடியாது. அதுவும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தயாரிப்பாளர் சங்க செயற்குழுவிற்கு அதிகாரமில்லை.