தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடிக்கும் 'பைரவா' படம் நாளை மறுநாள் 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படம் ஆரம்பமாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள 62வது படம் பற்றி இப்போதே தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படும் இந்தத் தகவலை நம்பலாமா, வேண்டாமா என்று சொல்லுமளவிற்கு ஒரு ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.
நடிகராக மட்டுமே இருந்த தனுஷ், பின்னர் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இப்போது அந்த நிறுவனத்தில் ரஜினிகாந்த்தே கதாநாயகனாக நடிக்க உள்ளார். அதே நிறுவனத்தில் இப்போது விஜய் நடிக்கப் போகிறார் என்பதுதான் அந்த ஆச்சரியமான தகவல். மேலும், இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போகிறார் என்றும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை, தமிழ், தெலுங்கில் இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. கோடை விடுமுறையில் இந்தப் படம் வெளிவர உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகுதான் தனுஷ் - ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் படம் ஆரம்பமாகலாம் என்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'கத்தி' படத்தையே தனுஷ்தான் தயாரித்திருக்க வேண்டியது, கடைசி நேரத்தில் மாறிவிட்டது என்றும் ஏற்கெனவே கோலிவுட்டில் ஒரு தகவல் உண்டு. இந்தத் தகவல் உண்மையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.