ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'காக்க காக்க' என்ற ஸ்டைலிஷான படம் மூலம் சூர்யாவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அந்தப் படத்திற்குப் பிறகுதான் சூர்யாவுக்கென ரசிகர்கள் சேர்ந்தார்கள். சூர்யாவை அந்தப் படத்தில் நாயகனாக்க பெரும் முயற்சி எடுத்தவர் ஜோதிகா. முதலில் தயங்கிய கௌதம் மேனன் பின்னர் அதற்கு சம்மதித்தார். படமும் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து 'வாரணம் ஆயிரம்' படத்திலும் கௌதம் மேனன் - சூர்யா கூட்டணி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.
ஒரு கட்டத்தில் தன்னைப் பெரிய ஹீரோவாக நினைக்க ஆரம்பித்த சூர்யா, தன்னை மாற்றிய கௌதம் மேனனிடமே கதையில் 'கரெக்ஷன்' சொன்னதால், அவர்கள் ஆரம்பிப்பதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' படம் பூஜையுடன் நின்று போனது. சூர்யா, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. படத்திலிருந்து விலகியதற்கான விளக்கக் கடிதத்தை வெளியிட்டு கௌதம் மேனனை அசிங்கப்படுத்தினார். இதன் பின்னர் இந்தக் கூட்டணி வாய்ப்பேயில்லை என்ற நிலை உருவானது. இருந்தாலும் சிலரது விடாமுயற்சியில் மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படம் ஆரம்பமாகலாம் என்றார்கள்.
அவர்கள் சொன்னது போல் படம் ஆரம்பமாகிவிட்டது, ஆனால், கௌதம் மேனன் சூர்யாவை மாற்றிவிட்டு விக்ரமை ஹீரோவாக்கிவிட்டார். வேறு யாரை வைத்து இந்தப் படத்தை ஆரம்பித்திருந்தாலும் சூர்யா கண்டு கொண்டிருக்க மாட்டார். ஆனால், அவர் போட்டியாக நினைக்கும் விக்ரமை வைத்து கௌதம் மேனன் ஆரம்பித்திருப்பது சூர்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். கோலிவுட்டில் இந்த விவகாரம்தான் இப்போது 'ஹாட் டாபிக்' ஆக ஓடிக் கொண்டிருக்கிறது.